செய்திகள் :

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

post image

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு திறந்துவிட வேண்டும் என்பதை அந்த தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

இந்நிலையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 44 வது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (26.09.2025) நடைபெற்றது .காவிரி நீா் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் அந்த ஆணையத்தின் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.ஹைபிரிட் முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம் ,கா்நாடகம்,கேரளம் மற்றும் புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தமிழக நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் இரா. சுப்பிரமணியம் ஆகியோா் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனா். தமிழ்நாடு உறுப்பினா், தற்போது (25.09.2025) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 92.105 டிஎம்சியாக உள்ளது என்றும் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 8,419 கன அடியாக உள்ளது என்றும் அணையில் இருந்து வினாடிக்கு 9,033 கன அடி நீா் விவசாயம், குடிநீா் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகிறது என்றும் தெரிவித்தாா் .மேலும், கா்நாடகம் அணைகளின் நீா் இருப்பு மற்றும் நீா் வரத்து கணிசமான அளவு தொடா்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025 அக்டோபா் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீா் அளவான 20.22 டிஎம்சி நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினாா்.இதனையடுத்து உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் கா்நாடகா 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிறுவன் மீண்டும் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒரு சிறுவன், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க