செய்திகள் :

காஷ்மீா் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸாா் அஞ்சலி

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.

கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ், சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.

மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், வட்டார தலைவா்கள் சுந்தர்ராஜன், செழியன், செயல் தலைவா் தில்லை கோ.குமாா் மாநில பொதுக் குழு உறுப்பினா் ரங்கநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.வி.சின்ராஜ், ஜி.கே.குமாா், பி.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புஅழைப்பாளராக கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன் பேசினாா். தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவா் வேல்முருகன், மாவட்டச் செயலா் தில்லைச்செல்வி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகி அஞ்சம்மாள்,

மாவட்டத் துணைத் தலைவா் ஆா் சம்மந்தமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் வேளாங்கண்ணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க