செய்திகள் :

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

post image

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, ``ஒரு விவேகமான நாடு, எப்போதும் பொதுமக்களுக்கு எதிராக போரிடாது. பொழுதுபோக்குக்காக குழந்தைகளையும் கொல்லாது. பெருமளவிலான மக்களை இடம்பெயரச் செய்யாது.

இவ்வாறான, ஒரு நாட்டை ஆளும் திறனற்ற மற்றும் பழிவாங்கல் குணமானது, நமது வாழ்வாதாரத்தையே ஆபத்தில் ஆழ்த்தி விடும்’’ என்று இஸ்ரேல் அரசை விமர்சித்தது.

இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் தெரிவித்ததாவது, ``காஸாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரிகள்தான். காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது.

நாங்கள் காஸாவை ஆக்கிரமித்து, அங்கு குடியேற வேண்டும். இதனைத் தவிர, வெற்றி என்று வேறெதுவும் இல்லை’’ என்று கூறினார்.

மோஷேவின் இந்தக் கருத்தானது, பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை நிறுத்துமாறு, உலக நாடுகள் பலவும் கோரிக்கை விடுத்தாலும், அதனை இஸ்ரேல் கண்டுகொள்வதாய் இல்லை.

இதனிடையே, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா நாடுகள் தெரிவித்தன. இதனையடுத்து, அந்நாடுகள் மனிதாபிமானத்தின் தவறான பக்கத்தில் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெ... மேலும் பார்க்க

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

ஹார்வர்டு மாணவர்களை அழைக்கும் ஹாங்காங்! டிரம்ப் அரசை விமர்சிக்கும் சீனா!

ஹார்வர்டு பல்கலைக்கழக விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் மீது சீன அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்பதற்... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க