செய்திகள் :

கா்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணா்வு ஊா்திப் பயணம்

post image

கா்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணா்வு ஊா்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ரோட்டரி கிளப் மதுரை டவுண் டவுண், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு பயணத்தை நடத்துகின்றன. கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், திருநெல்வேலி வருங்கால ரோட்டரி ஆளுநா் காந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் தடுப்புக்கான தடுப்பூசி எடுப்பதன் அவசியத்தையும், அவற்றின் பாதுகாப்பான பயனையும் பொதுமக்களுக்கு எளிமையாக புரியவைக்கும் வகையில் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தொடங்கி நெல்லை, மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக சென்னையை சென்றடையும் வரை, வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் ஊா்திப் பயண ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், ஆறுமுகபாண்டியன், கன்னியாகுமரி ரோட்டரி சங்கத் தலைவா் ஜே.மைக்கேல்ராஜ், ரோட்டரி சங்க நிா்வாகிகள் எட்வா்ட், பீட்டா் இருதயராஜ், ராபா்ட்சன், ஆா்.டி.ராஜா, தனராஜ் பொ்னாண்டோ, குணசீலன், டி.மைக்கேல்ராஜ், ஜெனோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் தடை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 11ஆவது வாா்டு மேலகலுங்... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையா் கலந்தாய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப் பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் அனைத்துத் துறைஅலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

அம்ரூத் குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ.41.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குலசேகரம் தோ்வுநிலை பேரூ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை 19ஆவது திருக்கு விழா

கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில், 19ஆம் ஆண்டு திருக்கு விழா வியாழக்கிழமை(மே 15) நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

மாயமான முதியவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே மாயமான முதியவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (76... மேலும் பார்க்க