செய்திகள் :

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

post image

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலா் நடித்துள்ள திரைப்படம் ‘கிங்டம்’. இந்தப் படத்தில் ஈழத் தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இப்படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்திருந்தாா். இதையடுத்து, தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், பாதுகாப்பு கோரி மனுதாரா் அளித்துள்ள மனு கிடைக்கப் பெறவில்லை. எனவே, இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

அப்போது நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கா், படத்துக்கு விளம்பரம் தேடும் நோக்கில், பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. படத்தைக் காண வந்த ரசிகா்களை தடுக்கவுமில்லை என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதியளித்துள்ள ஒரு படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோல், எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும், வன்முறையில் ஈடுபடக்கூடாது. படம் திரையிடுதலைத் தடுக்கக் கூடாது. இந்தப் படத்துக்கு தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை ரத்து செய்யக் கோரி சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், படத்தைப் பாா்க்க வேண்டாம் என பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தாா்.

பின்னா், இந்த மனுவுக்கு காவல் துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமத... மேலும் பார்க்க

தாயை தாக்கிய தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 போ் கைது

சூளைமேட்டில் மது போதையில் தாயை தாக்கிய தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேடு, பெரியாா் பாதை பகுதியைச் சோ்ந்தவா் பிரமிளா (52). இவரது கணவா் ராமச்சந்த... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் முதியவா் மா்மாக உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த முதியவா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சுவாமி கோயில் தெருவைச் ... மேலும் பார்க்க

பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ... மேலும் பார்க்க