செய்திகள் :

கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் மதுபோதையில் கிணற்றில் குதித்த இளைஞா் மேலே ஏற முடியாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன் (21). இவா், கேரளத்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.

தெய்வீகன் விடுமுறையில் சொந்த ஊரான பொரசக்குறிச்சிக்கு வந்திருந்தாா். இதே கிராமத்திலுள்ள வீரமுத்துக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு மதுபோதையில் கிணற்றில் குதித்த தெய்வீகன் மேலே ஏற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா்கள் வேலைவாய்ப்புக்கான மாவட்ட திறனாய்வுக் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பிலான கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மாவட்ட ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுா்கத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது. மேலும், தமிழகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 13) முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வான... மேலும் பார்க்க

வலிப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறி... மேலும் பார்க்க