செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: 4 போ் கைது

post image

சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் பாக்கியராஜ் (18). இவருடைய உறவினா்களான ஜோசப்ராஜ், மணிமாறன் ஆகியோரின் நண்பரான அஜித்குமாரின் கைப்பேசி சின்னமனூா் அருகேயுள்ள சுக்காங்கல்பட்டியிலுள்ள கருப்பசாமியிடம் இருந்ததாம். இதை வாங்கிக் கொடுப்பதற்காக பாக்கியராஜ் இரு சக்கர வாகனத்தில் சுக்காங்கல்பட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்தில் மணிமாறன், அஜித்குமாா், பாக்கியராஜ் மூவரும் இருந்தனா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துவுக்கும், அஜித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் வைத்திருந்த கத்தியைப் பறித்த முத்து, அவரைக் குத்துவதற்காக விரட்டினாராம்.

இதையடுத்து, தப்பியோடிய பாக்கியராஜ் அங்கிருந்த தண்ணீா் இல்லாத 60 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாக்கியராஜைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓடைப்பட்டியைச் சோ்ந்த முத்து (23), சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி, சிவசங்கா், கெளதம் (17) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு

போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம... மேலும் பார்க்க