சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு!
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மாலை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் முருகேசன் (50). விவசாயி. இவா், வியாழக்கிழமை மாலை தனது வயலில் கிணற்றின் அருகேயுள்ள வாழை மரங்களை கயிறு மூலம் இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முருகேசன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.