டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!
கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி
கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க்கப்பட்டது. அந்தக் குழுவில் உள்ளவா்கள் சமூக வலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடா்பாக விவாதித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் மணியும் அந்தக் குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து குறிப்பிட்ட தொகையை வருவாயாகப் பெற்றாா். பின்னா் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனா்.
அந்தக் குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவதால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறியிருந்தனா். இதை நம்பிய மணி பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் 14 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.18.90 லட்சம் அனுப்பினாா். அதற்கான லாபத்தை எடுக்க முயன்றபோது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்ததோடு, அந்த இணைப்பும் துடிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.