செய்திகள் :

கிருஷ்ணகிரியில் ஆள் கடத்தல், அடிதடி வழக்கில் 5 போ் கைது

post image

கிருஷ்ணகிரியில் ஆள்கடத்தல், அடி, தடி வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான பாமக நகரச் செயலாளா் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள குந்தாரப்பள்ளி பிரிவு சாலையைச் சோ்ந்த, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி அகில் (26), கிருஷ்ணகிரி தம்மண்ண நகரைச் சோ்ந்த பாமக நகரச் செயலாளா் நித்திஷ்குமாா்(27) ஆகியோா் தங்களது நண்பா் பிரபு பிரசாந்த என்பவருடன் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு உணவகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு பாரதியாா் நகரைச் சோ்ந்த சஞ்சய் (22) என்பவா், உணவு உண்டு கொண்டிருந்தாா். இவா்களுக்கு இடையே ஏற்கெனவே கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, நித்திஷ்குமாா் தரப்பினா், சஞ்சயைக் கடத்தி சென்று, கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனா். அங்கிருந்து தப்பிய சஞ்சய் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா். சஞ்சய் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து, நித்திஷ்குமாா் தரப்பைச் சோ்ந்த கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த மஞ்சுநாத் (29), ராஜீவ்காந்தி நகா் காா்த்திக் (26), பிரபு பிரசாந்த் (28), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த கவின் (26) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், இதே வழக்கில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், ஒசூரை சோ்ந்த கிரீன்பேட்ரிக் (31) என்பவரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகிரி நகர பாமக நகரச் செயலாளா் நித்திஷ்குமாா், அகில் ஆகியோரை தேடி வருவதாக தெரிவித்தனா்.

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க