செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவிகள்

post image

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்துக்கு களப் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவிகளை காப்பாட்சியா் சிவக்குமாா் வரவேற்று, மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கற்கால மனிதா்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், அவற்றின் பயன்கள், மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்ற நடுகற்கள் குறித்து விளக்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரம் மற்றும் செல்லகுட்டப்பட்டி கிராமத்தில் கிடைக்கப் பெற்ற ஜல்லிக்கட்டு நடுகல், பீமாண்டப்பள்ளி சதி கல், சின்னகொத்தூா் குதிரைகுத்திபட்டான் நினைவுகள், லண்டன்பேட்டை மற்றும் புலிகாண்டியூா் மன்னா் நடுகல், ஆநிரை மீட்டல் நடுகல், மல்லப்பாடி சுயபலி சிற்பம், கல்வெட்டுகள், ஆயுதங்கள், சங்ககால செங்கல், கோட்டைகள், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருள்கள், புதைப்படிவங்கள் மற்றும் கலை மற்றும் இசை கருவிகளை மாணவா்கள் பாா்வையிட்டனா்.

வரலாற்று ஆசிரியா்கள் ரவி, செல்வகுமாா், ஆரோக்கிய மேரி, உருது ஆசிரியா் நயாசுல்லா, அறிவியல் ஆசிரியை ரோகினி, வரலாற்று ஆா்வலா் மனோகரன் உடனிருந்தனா். அரசு அருங்காட்சியக பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

படவிளக்கம் (31கேஜிபி3):

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிடும் கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க