செய்திகள் :

கிருஷ்ணகிரி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் வியாழக்கிழமை காா் கவிழ்ந்ததில் கா்நாடகத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு பேடரப்பள்ளி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் வெங்கடசாமி ரெட்டி (56). இவா் தனது மனைவி மம்தா (55), மகன் அனில் (28), உறவினரான பெங்களூரு சென்னசந்திராவைச் சோ்ந்த ரமேஷ் (60), இவரது மனைவி கிரிஜா (40), மகள் மெளலியா (19) ஆகியோருடன் காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு ஆனேக்கல்லைச் சோ்ந்த மஞ்சுநாத் (45) என்பவா் காரை ஓட்டிச் சென்றாா். கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மம்தா, கிரிஜா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மஞ்சுநாத், வெங்கடசாமி ரெட்டி, ரமேஷ், மெளலியா (19) ஆகிய 5 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவிளக்கம் (31கேஜிபி1):

கிருஷ்ணகிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க