செய்திகள் :

குஜராத்: பல் சிகிச்சை மேற்கொண்டவருக்குக் காதுகேளாமை சரியான வினோதம்; மருத்துவர்கள் சொல்வது என்ன?

post image

குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.

கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இருந்துள்ளது. எந்தவொரு காதுகேட்கும் கருவியும் கூட அவருக்கு உதவ முடியவில்லை.

ஜெய்புன்னிஷாவின் மகள்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். காதுகேளாமையால் எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும், உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினருடன் தொடர்பில்லாமல் தனிமையில் வாடியுள்ளார்.

ஜெய்புன்னிஷாவுக்கு ஜூலையில் கோக்லியர் உள்வைப்பு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது காதுகேட்பதற்கான நரம்புகளைத் தூண்டும் ஒரு வித சிகிச்சை.

இதற்காக துபாயில் ரேடியாலஜிஸ்ட்டாக இருக்கும் அவரது மகள் இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவில் பல் மருத்துவராக இருக்கும் மகள் சிகிச்சை குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்திருக்கிறார்.

ear
ear

அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னரே திடீரென ஜெய்புன்னிஷாவுக்குச் சுத்தியிருந்த சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

உடனடியாக தனது கணவரிடம் சென்று கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் பேசி உறுதி செய்துள்ளனர்.

இந்தத் திடீர் மாற்றம் முழு வாய் மறுசீரமைப்பு, டெம்போரோமாண்டிபுலர் மூட்டு மறுவாழ்வு (temporomandibular joint rehabilitation) மற்றும் நரம்பு சுருக்கம் (nerve decompression) ஆகிய பல் தொடர்பான சிகிச்சைகளை அடுத்தடுத்து மேற்கொண்டதனால் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

"பல் சிகிச்சையால் அவரது கேட்கும் திறன் மேம்பட்டுள்ளது. நரம்பு சுருக்கம் சிகிச்சையில் காதுடன் தொடர்புடைய நரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கேட்கும் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் அவரது கேக்லியல் அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப்... மேலும் பார்க்க

World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநி... மேலும் பார்க்க

ரூ.2,700 கோடி சொத்து இருந்தும் சிக்கன ஷாப்பிங், தனிபாதை - எளிமையை விரும்பும் அக்‌ஷய்குமார் மகன் ஆரவ்

பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வா... மேலும் பார்க்க

இமாச்சல் பிரதேசம்: ”எங்களுக்குப் பெருமைதான்” - ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள்; பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் க... மேலும் பார்க்க

கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க