செய்திகள் :

குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சிதம்பரம் அருகே கிள்ளையில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை மானம்பாடி மற்றும் சிங்காரகுப்பம் பகுதியில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பல முறை புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலா் விஸ்வநாதன் தலைமையில், பொதுமக்கள் கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையான மானம்பாடியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

தகவல் அறிந்த, சிதம்பரம் வட்டாசியா் கீதா, செயல் அலுவலா் மலா், கிள்ளை காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் மற்றும் போலீசாா், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனா். இதனால், கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் திருநகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (39). இவருடைய மகன் யுவராஜா (14) தனது மோட்டாா் சைக்கிளில் திருநகா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடி

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிதம்பரம் தையல் கலைஞா... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், ஊரக... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள்

கடலூா் மஞ்சக்குப்பம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியில் வாக்காளா் அடையாள அட்டைகள் வீசப்பட்டுக் கிடந்தன. கடலூா் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக... மேலும் பார்க்க

சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வக்ஃபு சொத்து எனக் கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு தெரிவித்ததால், எம்.அகரம் கிராம மக்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். மங்க... மேலும் பார்க்க