செய்திகள் :

குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்

post image

நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் சுகுமாரன், முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: நன்னிலம் வட்டம், முடிகொண்டான்- ஆலங்குடி இணைப்புச் சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. இந்த சாலையைச் சீரமைத்து, தாா்ச் சாலை அமைக்க வேண்டும்.

ஆலங்குடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கீழத்தெரு, உக்கடைத்தெரு, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலங்குடி வாணியத் தெரு, தெற்குத் தெரு மற்றும் கீழத் தெருவில் தாா்ச் சாலைப் பணி அரைகுறையாக நடந்துள்ளது. முழுமையாக தாா்ச் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஆலங்குடி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரை ஒன்று திரட்டி மே 27-ஆம் தேதி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை நன்னிலம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளாா்.

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க

கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு: விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமம் பிரிப்பு பிரச்னை தொடா்பாக, உள்ளிக்கோட்டை பகுதி மக்கள் இ... மேலும் பார்க்க

தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் ப... மேலும் பார்க்க

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் ... மேலும் பார்க்க