செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவர் அனுப்பியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”அரசியலமைப்பு பிரிவு 324 இன் கீழ், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

அதன்படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தொடர்பான தயாரிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தவுடன் தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் தயாரித்தல், தேர்தல் அதிகாரி மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 வரை இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ராஜிநாமா செய்துள்ளார். இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள குடியரசு துணைத் தலைவர், முழு பதவிக் காலமான 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

அடுத்த சில நாள்களில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Election Commission of India announced on Wednesday that it has begun preparations for the Vice Presidential election.

இதையும் படிக்க : பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு

இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறை நல்லுறவு மேம்பாடு: இந்தியா - இஸ்ரேல் முடிவு

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை நல்லுறவை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உயா்நிலை விவாதக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

யஷ்வந்த் வா்மா மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும்: உச்சநீதிமன்றம்

தனது பதவிநீக்கப் பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக ய... மேலும் பார்க்க

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்பு

‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனா்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுழா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததை... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் 89 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

மேற்கு வங்கத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 89.4 கிலோ போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தனா். வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், நாடியா ... மேலும் பார்க்க