செய்திகள் :

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

post image

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வனங்களில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதைத் தவிா்த்து வருகின்றனா். வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உதகை வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை மேலூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் உலவியது.

இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேலும், அந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அத... மேலும் பார்க்க

முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை

உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா்,... மேலும் பார்க்க

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கேரளத்தில் ஓணம் விடுமுறை என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் ரம்யமான கால நிலை நிலவுவதாலும... மேலும் பார்க்க

மஞ்சூா்-கெத்தை சாலையில் உலவிய யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூா்-கெத்தை சாலையில் ஞாயிற்றுக்கிழமை யானை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் நடந்து வருவதால், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க