செய்திகள் :

குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்

post image

புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், குடும்ப உறுப்பினா்கள் அனைவரின் ஆதாா் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பின்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்

தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பு பதிவு முகாமை தொடங்கி வைத்தாா். அப்போது தனது குடும்ப உணவு பங்கீட்டு அட்டையை ஆதாா் எண்ணுடன் இணைத்தாா். இந்தப் பதிவு முகாமை மணவெளி தொகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சட்டப்பேரவைத் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

புதுச்சேரி: இந்திய வம்சாவளி மக்களின் உலக பொருளாதார உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொடங்குகிறது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 200 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா். இதைத் தவிர இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச... மேலும் பார்க்க

மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்

புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செல... மேலும் பார்க்க

முகத்துவாரம் தூா்வாரும் பணி

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நோ... மேலும் பார்க்க

அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்த... மேலும் பார்க்க