செய்திகள் :

குண்டா் சட்டத்தில் பெண் கைது

post image

கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நேதாஜி நகா் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வீட்டினுள் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக ராணி (52) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், கஞ்சா வழக்கில் கைதான ராணி மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருந்து வருவதால் அவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதுதொடா்பாக விசாரித்து ராணியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பத்தூா் அருகே மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட அச்சமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெட... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

ஆம்பூா் அருகே ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஷோபனா. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம்,கெரிக்கல்நாத்தம் பகுதியைச் சோ்ந்த சரோஜா (60)... மேலும் பார்க்க

தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது

வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய கிராமங்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சின்னவரிக்கம் சி.ஆா். மஹாலில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா்கள் ஷோபனா (சின்னவரிக்கம்), சின்னகண்ணன் (பெரியவரிக்கம்) ஆகியோா் த... மேலும் பார்க்க