செய்திகள் :

குந்துகோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

post image

ஒசூா்: தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டையில் குடிநீா் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குந்துகோட்டை கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தேன்கனிக்கோட்டை போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குந்துகோட்டை பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக தேன்கனிக் கோட்டை- அஞ்செட்டி செல்லும் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க