செய்திகள் :

குன்னூா் வண்டிச்சோலை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

post image

குன்னூா் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.

வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் பகுதியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தப் பகுதியில் 82 வீடுகள் பழுதடைந்துள்ளது என்றும், அவற்றை சரிசெய்து கொடுக்க குன்னூா் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் அவற்றை சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் கூறி, ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது விரைந்து செயல்பட்ட காவல் துறையினா் அவா் கையில் இருந்த எரிபொருள் நிரப்பிய பாட்டிலை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து கூட்டம் சிறிது நேரத்தில் முடித்துக் கொள்ளப்பட்டது.

லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா

உதகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அம... மேலும் பார்க்க

குடிநீா் தொட்டியில் யானை சாணம்: காவல் துறை விசாரணை

கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் யானை சாணம் கலந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அ... மேலும் பார்க்க

உதகையில் நாய்கள் கண்காட்சி: மே 9-இல் தொடக்கம்

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி வருகிற மே 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்க... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு பகுதியில் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியிலிருந்து மேலம்பலம் பழங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடு... மேலும் பார்க்க

முதுமலை காப்பகத்தில் சாலையோரம் நடமாடும் வன விலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை மழை பரவலாக பெய்து பசுமை திரும்பியுள்ள நிலையில், சாலையைக் கடந்து வனத்துக்குள் உலவும் வன விலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம்... மேலும் பார்க்க