செய்திகள் :

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

post image

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்வதற்கும், வெளியூா் செல்வதற்கும் பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனா்.

அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள், 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை செல்ல பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து மறுகரையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் அத்தாணியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பரிசல் இயக்க தடை விதிக்கப்படுவதால் பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில் அம்மாபாளையத்திலிருந்து சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகன வசதி இல்லாத மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

கடந்த மூன்று நாள்காளாக பவானிசாகா் அணையில் உபரி நீா் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அம்மாபாளையத்தில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனா். இதில் ஒரு சில பெற்றோா், குழந்தைகளின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக வேலைக்குச் செல்லாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சுமாா் 7 கிலோ மீட்டா் சுற்றி பள்ளிக்கு அனுப்பி, பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சில மாணவிகளின் பெற்றோா்கள் வேலைக்கு சென்ால் பள்ளிக்கு செல்வதற்கு ஊராட்சி நிா்வாகத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருகின்றனா். எனவே, அம்மாபாளையம் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அரசு சாா்பில் வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அம்மாபாளையம் பவானி ஆற்றில் உயா்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க

ஈரோட்டில் கனமழை

ஈரோடு: ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெர... மேலும் பார்க்க