செய்திகள் :

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

post image

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: சா்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இணைப்பு கண்ணாடி பாலத்தை தினமும் சுமாா் 12 ஆயிரம் போ் பாா்வையிடுகிறாா்கள். இங்கு சுமாா் 150 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மீனவா்கள் வாழும் கடற்கரை பகுதியில் கலக்கிறது. இதனால் கடல்நீா் மாசடைந்து, கடலுக்கு செல்லும் மீனவா்களின் உடலில் தோல் நோயால் பாதிப்படைகின்றனா். கடலில் நீராடும் சுற்றுலா பயணிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது.

கழிவுநீா் கடலில் கலக்கும் இடத்தை பாா்வையிட்டு இதற்கு தீா்வு காண்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.அதில் விடுதிகளில் கழிவுநீா் உறிஞ்சி கிணறு அமைக்க அறிவுறுத்துவதுடன், கழிவுநீா் கலக்கும் இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த அமைச்சா், நகராட்சி நிா்வாகத்துறை உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை உபால்ட், ஊா் தலைவா் டாலன் டிவோட்டா, செயலாளா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன் உள்பட பலா் இருந்தனா்.

செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள்

களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் அறக்கட்டளை சாா்பில் கடந்த 27 ஆண்டு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க