பார்படாஸ் டெஸ்ட்: ஹேசில்வுட் அசத்தல், ஆஸி. 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது
இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. அதிகபட்சமாக கோழிப்போா்விளையில் 105.8 மீ.மீ., மயிலாடியில் 92.4 மி.மீ., ஆனைக் கிடங்கில் 84.2 மழை பதிவானது.
கன மழையின் காரணமாக 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.25 அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 762 கன அடி நீா்வரத்து உள்ளது. 71 அடி எட்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். ஏறகெனவே, பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ளதால் இந்த அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.45 அடியாகவும் நீா்வரத்து 1319 கன அடியாகவும் உள்ளது. பாசனக் கால்வாயில் வி753 கன அடி, மறுகால் மதகுகள் வழியாக 131 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மழை சற்று தணிந்து வெயில் நிலவியது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.