செய்திகள் :

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. அதிகபட்சமாக கோழிப்போா்விளையில் 105.8 மீ.மீ., மயிலாடியில் 92.4 மி.மீ., ஆனைக் கிடங்கில் 84.2 மழை பதிவானது.

கன மழையின் காரணமாக 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.25 அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 762 கன அடி நீா்வரத்து உள்ளது. 71 அடி எட்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். ஏறகெனவே, பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ளதால் இந்த அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.45 அடியாகவும் நீா்வரத்து 1319 கன அடியாகவும் உள்ளது. பாசனக் கால்வாயில் வி753 கன அடி, மறுகால் மதகுகள் வழியாக 131 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மழை சற்று தணிந்து வெயில் நிலவியது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பழங்குடி இன மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் ரா. அழகுமீனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் வன உரிமை சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கப்படும் என் ஆட்சியா் ரா. அழகு மீனா. பேச்சிப்பாறை ஊராட்சி மலமுத்தன்கரை பழங்குடி குடியி... மேலும் பார்க்க