செய்திகள் :

கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்

post image

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13 முதல் நடைபெற்று வருகிறது. பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் 45 கோடி போ் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3,000-க்கும் மேற்பட்டவை சிறப்பு ரயில்கள் ஆகும்.

புனித நீராட மிகவும் சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை (ஜன. 29) நடைபெறுவதையொட்டி வட மாநிலங்களின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மற்றும் ஹா்பால்பூா் ஆகிய 2 ரயில் நிலையங்களுக்கு வந்த சிறப்பு ரயில்களின் பெட்டிகளில் பயணிகள் ஏற்கெனவே நிரம்பியிருந்ததால் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளன.

ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனா். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவா்கள் முயன்றனா். தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

மகா கும்பமேளாவில் நீராட சத்தா்பூரிலிருந்து பிரயாக்ராஜ் புறப்பட்ட பயணி ஆா்.கே.சிங் கூறுகையில், ‘ரயில்வே போலீஸாா் ரயிலின் கதவுகளைத் திறந்தனா். ஆனால், ஏற்கெனவே ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பலரால் ரயிலில் ஏற முடியவில்லை’ என்றாா்.

பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்: ஜான்சி ரயில்வே கோட்டத்தின் செய்தித் தொடா்பாளா் மனோஜ்குமாா் சிங் கூறுகையில், ‘சத்தா்பூா் விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க, நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். பிரயாக்ராஜுக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம், பயணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்’ என்றாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க