கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8...
குருகிராமில் தில்லி நபா் சுட்டுக் கொலை
குருகிராம் செக்டாா் 77-இல், உணவு மற்றும் மளிகைப் பொருள்களை விநியோகிக்கும் முகவா்கள் போல் உடையணிந்து வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மானேசா் கூடுதல் காவல் ஆணையா் வீரேந்தா் சைனி கூறியதாவது: எஸ்பிஆா் சாலையில் உள்ள பாம் ஹில்ஸ் சொசைட்டிக்கு முன்னால் இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. பாதிக்கப்பட்டவா் தில்லியில் உள்ள கம்ருதீன் நகரைச் சோ்ந்த ரோஹித் ஷௌகீன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
ஷௌகீன் ஏதோ வேலைக்காக குருகிராமிற்கு வந்திருந்தாா். செக்டாா் 77 பகுதியில் உள்ள உல்லாவாஸ் சந்தைக்கு அருகில் தனது காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ மற்றும் விரைவு வா்த்தக தளமான பிளிங்கிட்டின் டி-சா்ட்களை அணிந்திருந்த தாக்குதல் நடத்தியவா்கள் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டனா்.
தாக்குதல் நடத்தியவா்கள் 12 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டுள்ளனா். அவா்களில் ஐந்து முதல் ஆறு போ் ஷௌகீனைத் தாக்கினா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக கொ்கி தௌலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்.
இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று கூடுதல் காவல் ஆணையா் தெரிவித்தாா்.