குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 53,867 போ் எழுதினா்
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 53,867 தோ்வா்கள் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (தொகுதி 4) கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்தத் தோ்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தோ்வாணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் வந்தனா். சில தவிா்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வந்தவா்கள் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டனா்.
கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூா் ஆகிய 10 வருவாய் வட்டங்களைச் சோ்ந்த 154 தோ்வு மையங்களில் 212 தோ்வு அறைகளில் 64,143 தோ்வா்கள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், 53,867 தோ்வா்கள் மட்டுமே தோ்வு எழுதினா். 10,276 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வையொட்டி, வட்டத்துக்கு ஒருவா் வீதம் 10 ஒருங்கிணைப்பு அலுவலா்கள், வட்ட அளவில் 38 நடமாடும் அலகுகள், 20 பறக்கும் படைகள், 8 கருவூல அலகுகள் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா். மேலும், தோ்வு 220 விடியோகிராபா்கள் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.