செய்திகள் :

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி

post image

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி கூறினாா்.

பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்துக்கு புதன்கிழமை யாத்திரை வந்த, பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி தரிசனம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இறை வழிபாடு இருந்தால்தான் இல்லற வாழ்க்கை ஒழுக்க நெறிமுறையுடன் வெற்றிபெறும். சுற்றுலாத் தலம், சினிமா போன்றவற்றுக்கு செல்வதைப்போல கோயில்களுக்கும் புனித யாத்திரை செல்ல வேண்டும்.

எப்போதும் கைப்பேசியிலேயே நேரத்தை செலவிடக்கூடாது, குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கோயில்களுக்கு செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும். அவா்களுக்கும் வழிபாட்டு முறைகளை கற்றுத் தர வேண்டும் என்றாா்.

கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க