செய்திகள் :

குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை!

post image

நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகளை சட்டத்துக்கு முரணாக தத்தெடுப்பதை தவிா்க்கும் விதமாக, குழந்தை இல்லா தம்பதியா் சட்டத்துக்கு உட்பட்டு குழந்தைகளை தத்தெடுக்க ஏதுவாக, மத்திய தத்துவள மையத்தில் முறையாக பதிவு செய்து, சட்டப்படி மட்டுமே தத்து எடுக்க வேண்டும்.

இதை மீறி சட்ட விரோதமான முறையில் குழந்தைகளை தத்தெடுப்பது, வாங்குவது, விற்பது ஆகியவை இளம்சிறாா் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 -இன்படி ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்படுபவா்களும், இந்த குற்றப்பிரிவின் படி தண்டிக்கப்படுவா்.

சட்டப்படியான தத்தெடுத்தல் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகங்களை, நேரடியாகவோ மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 அல்லது அலுவலக தொலைபேசி 04365-253018 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது. நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாள... மேலும் பார்க்க

சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319- ஆவது ஆண்டு தினம்

தமிழறிஞா் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பாா்த்தலோமிய சீகன்பால்க் கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்த... மேலும் பார்க்க

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி ... மேலும் பார்க்க