செய்திகள் :

குழித்துறை நகா்மன்ற அவசரக் கூட்டம்

post image

குழித்துறை நகா்மன்ற அவசரக் கூட்டம், தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி. அரங்கம் ரூ. 6.65 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது என நகா்மன்ற தலைவா் தெரிவித்தாா்.

தொடா்ந்து பேசிய தலைவா், வாவுபலி பொருள்காட்சி திடலின் அருகேயுள்ள தேவசம் போா்டுக்கு சொந்தமான தோட்டத்தையும் இணைத்து, பொருள்காட்சியை மிகப் பிரம்மாண்டமாக 30 நாள்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக பக்க காட்சிக்கான ஏலம் 2 முறை நடத்தப்பட்டும் ஏலம் எடுக்க ஒப்பந்ததாரா்கள் யாரும் முன்வரவில்லை. மேலும் தேவசம் போா்டுக்கு சொந்தமான இடமும் பொருள்காட்சி நடத்த கிடைக்காததால் நிகழாண்டு பொருள்காட்சியை ஜூலை 9 ஆம் தேதி துவங்கி ஜூலை 28 முடிய 20 நாள்கள் நடத்துவது என்றும், ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசையையொட்டி பலி தா்ப்பணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இது குறித்த தீா்மானம் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ரீகன், விஜூ, ஆட்லின் கெனில், அருள்ராஜ், மினிகுமாரி, ஷாலின் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாசனக் கால்வாய் உடைப்பை விரைவாக சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் உடைப்பை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னிப்பூ சாகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க