செய்திகள் :

கூடலூரில் கூண்டில் சிக்கிய சிறுத்தை

post image

கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடலூா் வனக் கோட்டம், பிதிா்காடு வனச் சரகத்துக்குள்பட்ட அய்யன்கொல்லி, நரிக்கொல்லி மற்றும் வாளாடு மகாவிஷ்ணு கோயில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் ஒரு சிறுத்தை கடந்த சில நாள்களாக நடமாடுவதாக பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.

இந்தச் சிறுத்தை காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆலோசனைப்படி சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

இந்தக் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை மாலை சிக்கியது. சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச... மேலும் பார்க்க

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க