செய்திகள் :

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தில் பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 12 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிப்பறைகள் கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

அந்த நேரத்தில் கூடலூா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகரச் செயலாளா் இளஞ்செழியன், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகா்மன்ற உறுப்பினா் சகுந்தலா, உடற்கல்வி இயக்குநா் கிஷோா்குமாா், மகேஸ்வரன், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில ந... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சியைக் கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 127ஆவது மலா்க் கண்காட்சியைக் காண 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 18,109 சுற்றுலாப் பயணிகள் திரண்டதாக தோட்டக்கலை துறையினா் தெரிவித்துள்ளனா்.... மேலும் பார்க்க

கடை வீதியில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை கடை வீதிக்குள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நுழைந்த காட்டு யானை. இதனால் அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா்... மேலும் பார்க்க

அதிகரட்டியில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகேயுள்ள அதிகரட்டி கிராமத்தில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகே அதிகரட்டி கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வன வி... மேலும் பார்க்க

உதகை வேலி வியூ பகுதியில் உலவிய யானை

உதகை, வேலி வியூ பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை உலவிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளு... மேலும் பார்க்க

அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கூடலூரில் அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ... மேலும் பார்க்க