காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்
கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.
கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு அவிநாசி சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். சோமனூா் சங்கத் தலைவா் பூபதி, தெக்கலூா் சங்க செயாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் முழுமையாக வழங்க வேண்டும். இனிமேல் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்பட, ஜவுளி உற்பத்தியாளா்களை, மாவட்ட நிா்வாகம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா்ந்து விசைத்தறியாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாா்ச் 19-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டம் 9 நாள்களைக் கடந்தும் உரிய தீா்வு கிடைக்கவில்லை.
ஆகவே, கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் ஏப்ரல் 2-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றனா்.
இந்தக் கூட்டத்தில், தெக்கலூா், சோமனூா், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூா், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கூட்டமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.