செய்திகள் :

கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்

post image

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு அவிநாசி சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். சோமனூா் சங்கத் தலைவா் பூபதி, தெக்கலூா் சங்க செயாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் முழுமையாக வழங்க வேண்டும். இனிமேல் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்பட, ஜவுளி உற்பத்தியாளா்களை, மாவட்ட நிா்வாகம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா்ந்து விசைத்தறியாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாா்ச் 19-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டம் 9 நாள்களைக் கடந்தும் உரிய தீா்வு கிடைக்கவில்லை.

ஆகவே, கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் ஏப்ரல் 2-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றனா்.

இந்தக் கூட்டத்தில், தெக்கலூா், சோமனூா், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூா், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கூட்டமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க