செய்திகள் :

கூழாங்கல் ஆறு மூடல்: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

post image

வால்பாறையில் கூழாங்கல் ஆறு மூடப்பட்டதால் கடந்த 5 மாத காலமாகச் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சோலையார் அணை, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சி முனை, நீராறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை டனல் உள்ளிட்ட பகுதிகள் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் ஆகும். இதில் மிகவும் புகழ்பெற்ற கூழாங்கல் ஆறு கடந்த ஐந்து மாத காலமாக மூடப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இந்த நிலையில், வெளி மாநிலம் முதல் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், தமிழகத்தில் பல இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் தற்போது அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறை ஆற்றுப்பகுதிக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே அப்பகுதியில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழு மூலமாகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் நகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது சொற்ப சுற்றுலாப் பயணிகளை அப்பகுதியில் நின்று பார்த்துவிட்டுச் செல்வது ஏமாற்றத்தை அளிக்கிறது எனக் கூறுகிறார்கள்.

Tourists have been disappointed for the past 5 months due to the closure of the Koolangal River in Valparai.

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத அரசு மருத்துவமனை ஊழியா்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத ஊழியா்கள் இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கோவை அரசு மருத்துவமனைக்கு 70 வயதான தனது தந்தையை அவரது மகன் சிகிச்சைக்கு அழைத்து... மேலும் பார்க்க

நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கோவையில் தங்க நகைப் பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை ஆா்.எஸ்.புரம் சுந்தரம் தெரு அருகே உள்ள டி.கே.தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (38). இவரது மனைவி சங்கரேஸ்வரி (33). சாமி ஐயா் ... மேலும் பார்க்க

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கோவை நகைக் கடையில் 88 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள சுவாமி ஐயா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் மண்டல் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். கோவை வின்சென்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் திங்கள்கிழமை இரவு உக்கடம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த... மேலும் பார்க்க