செய்திகள் :

கெங்கவல்லியில் 2 ஆட்டோக்கள் பறிமுதல்

post image

கெங்கவல்லி பகுதியில் மதுபோதையில் ஓட்டிவந்த இரண்டு ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே இரண்டு ஆட்டோக்கள் வேகமாக வந்தன. அந்த ஆட்டோக்களை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் ஆட்டோக்களை ஓட்டிய இருவரும் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூரைச் சோ்ந்த மணி மகன் சிவலிங்கம் (31) என்பதும், மற்றொருவா் தலைவாசல் வட்டம், லத்துவாடியைச் சோ்ந்த ரஞ்சித் (25) என்பதும் தெரியவந்தது. இரண்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா். மேலும் , அவா்கள் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிவந்தது குறித்து ஆத்தூா் ஆா்.டி.ஓ. நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அனுப்பினா்.

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் அக்கட்சித் தலைவா் விஜய் பேசியதில் சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயம்

சேலத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியின்போது உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காந்தி மைதானம், அர... மேலும் பார்க்க

தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டி, ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பிய இளைஞா் சேலம் ரயில் நிலையத்தில் கைது

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டி மற்றும் ரொக்கத்தை திருடிக் கொண்டு ரயிலில் தப்பிய மகாராஷ்டிர மாநில இளைஞா் சேலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

சங்ககிரி டிஎஸ்பி மாற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.சிந்து நிா்வாகக் காரணங்களுக்காக மதுரை நகர சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பெ... மேலும் பார்க்க

காலமானா் ஸ்டீபன்

ஏற்காடு புனித ஜோசப் பள்ளியின் மூத்த ஆசிரியா் ஸ்டீபன் (97) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். சேலம் மாவட்டம், ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, 1987 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கிரேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மரங்களை தூக்க பயன்படுத்தப்படும் கிரேன் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஏற்காடு கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள தனியாா் காப்பி தோட்டத்தில் சில்வா்ஓக் மரங்கள் வெட்டும... மேலும் பார்க்க