அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி
கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் வீரமணிக்கு ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.
திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த சாதனையாளா்களுக்கு ஆண்டுதோறும் ராஜ கலைஞன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் சிறப்பாக கல்வி பணியாற்றி வரும் ஆசிரியருக்கான ராஜ கலைஞன் விருது, கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணிக்கு வழங்கப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று தங்கப் பதக்கத்துடன் விருது, சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை ஆசிரியருக்கு வழங்கி பாராட்டினாா். விருது பெற்ற தலைமை ஆசிரியா் வீரமணிக்கு பள்ளி ஆசிரியா்களும் தன்னாா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.