செய்திகள் :

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை: ரவி சாஸ்திரி

post image

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (ஜூன் 20) லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: விளையாட்டை விட விராட் கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்

கேப்டன் பொறுப்பு எளிதல்ல

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இங்கிலாந்துக்கு எதிரான சவாலை சமாளிப்பது அவ்வளவு எளிது கிடையாது எனவும், ஷுப்மன் கில் பொறுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்டன் பொறுப்பு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும் கடினமான வேலை ஷுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது. ஆனால், அவர் இந்த தொடரிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்.

இதையும் படிக்க: சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யூவிற்கு வாய்ப்பளியுங்கள்: கைஃப்

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தும்போது, ஷுப்மன் கில் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்த தொடர் ஷுப்மன் கில்லுக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தரும் என்றார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் காட்டிலும் பெரிது: ஷுப்மன் கில்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதைக் காட்டிலும் பெரிது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் க... மேலும் பார்க்க

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களின் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

1 vs 11: இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போதைய இந்திய அணியை விட அதிகமான சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அந்தளவுக்கு இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அண... மேலும் பார்க்க

புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கிய அறிவுரை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்... மேலும் பார்க்க

கேப்டனாக கலக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

விளையாட்டை விட விராட் கோலி பெரியவரில்லை: அஸ்வின்

விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிஜி... மேலும் பார்க்க