செய்திகள் :

கேரளத்தில் வன விலங்கு தாக்குதல் அதிகரிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

post image

கேரளத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காக்கவும், கேரள கடலோரப் பகுதியில் கனிம வளங்கள் எடுக்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற 46 வயது பெண்ணை புலி அடித்துக் கொன்றது உள்பட பல்வேறு வன விலங்கு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் தனது வயநாடு மக்களவைத் தொகுதிக்குச் சென்ற பிரியங்கா, புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீா்வுகாண்பதாகவும் கூறினாா்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுட்டனா். அப்போது, ‘கடலோரங்களில் கனிம வளம் எடுத்தல் என்ற பெயரில் நிகழ இருக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும்’, ‘வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்’, ‘மக்களைக் காப்பாற்று’ என்ற வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.

செய்தியாளா்களிடம் பிரியங்கா இது தொடா்பாக கூறுகையில், ‘வயநாட்டில் மட்டும் கடந்த டிசம்பா் 27-இல் இருந்து இப்போது வரை 11 போ் வன விலங்குகளால் உயிரிழந்துவிட்டனா். இந்த பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளூா் நிா்வாகத்திடம் போதிய நிதி இல்லை’ என்றாா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க

மகளிா் நலனுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்

மகளிா் நலனுக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் பிரத்யேக மருத்துவ மையம் ‘எஸ்ஆா்எம் குளோபல்’ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. உளவியல் பாதிப்புகளில் தொடங்கி பேறு கால சிகிச... மேலும் பார்க்க