செய்திகள் :

கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், வாணியம்பாடி வட்டம், மோட்டூா் கிராமம், புள்ளூா் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பாக மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் வருவாய், காவல், ஊரக வளா்ச்சி, வேளாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகங்கள், மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 345 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித் துணை ஆட்சியா்(ச.பா.தி) பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா்,மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன்ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா,(கணக்கு)சென்னகேசவன், அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வு பெற்ற சிஆா்பிஎப் உதவி ஆய்வாளா் மரணம்

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே வேகமாக வந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற சிஆா்பிஎப் உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பெத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுடி (63). ஓய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: இருவேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா். திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த பெருமாளின் மகள் காளீஸ்வரி (19)இந்த நிலையில், காளீஸ்வரி ... மேலும் பார்க்க

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க