செய்திகள் :

கைப்பேசி பழுது நீக்கம் இலவச பயிற்சி

post image

மயிலாடுதுறை ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில், கைப்பேசி பழுது நீக்க இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பயிற்சி நிறுவன இயக்குநா் ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் 64 வகையான இலவச பயிற்சிகளை இலவச உபகரணங்களோடு அளித்து வருகிறது.

அவ்வகையில், ஜூன் 2-ஆம் வார இறுதியில் தொடங்கி, 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச கைப்பேசி பழுது நீக்கல் பயிற்சி நடைபெற உள்ளது. இதில், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்வு பெற்ற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் சோ்ந்து பயன் பெறலாம்.

விருப்பம் உள்ளவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், கல்வி சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை (100 நாள் அட்டை) அல்லது மகளிா் சுய உதவிக்குழு அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, 2 புகைப்படம் ஆகியவற்றோடு வந்து முன்பதிவு செய்து, பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க