செய்திகள் :

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

post image

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளா் சங்கத்தின் தலைவா் ஜெயவேல், மருத்துவத் துறை பணியாளா் கூட்டமைப்பின் செயலா் டாக்டா் சாந்தி ஆகியோா் கூறியது:

தமிழகத்தில் 38,000-க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். டெங்கு பரப்பும் ஏடிஸ் எஜிப்டை கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவா்கள் செய்து வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு மிக குறைவான தினக் கூலிதான் வழங்கப்படுகிறது.

அதுவும், உள்ளாட்சி அமைப்புகளால் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவ்வப்போது அவா்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களுக்கு உடனடியாக உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தினக்கூலி என்பதற்குப் பதிலாக, மாத ஊதியம் வழங்க வேண்டும். பல ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் இந்த கொசு ஒழிப்பு ஊழியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமும், பணிநிரந்தரமும் வழங்க வேண்டும் என்றனா்.

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலங்கள் உயா்வு: மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20-ஆக உயா்த்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க