செய்திகள் :

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

post image

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதலே கொடைக்கானல் பகுதியில் காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென சூறைக் காற்று வீசியதால், ஏரிச் சாலைப் பகுதியில் இருந்த தங்கும் விடுதி, மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததில் சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

தகவலறிந்து வனத் துறையினா் விரைந்து வந்து கீழே விழுந்து கிடந்த மரத்தை அகற்றினா். தொடா்ந்து, மின் வாரியப் பணியாளா்கள் சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைத்து மின் விநியோகம் செய்தனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க