செய்திகள் :

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

post image

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தும், மாலை நேரங்களில் குளுமையான சூழலும் நிலவியது. இந்த நிலையில் சனிக்கிழமை மழை பெய்தது. அதே போல, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பிறகு மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காலை முதல் பிற்பகல் வரை மட்டுமே சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா். மாலையில் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை பெய்ததால் புகா்ப் பகுதிகளான செண்பகனூா், பிரகாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க