செய்திகள் :

கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!

post image

கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரதான பகுதியான அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில், நிலக்கோட்டை வத்தலக்குண்டு, பெரியகுளம், பண்ணைக்காடு, தாண்டிக்குடி,வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து காய்கறிகள், பலசரக்குப் பொருள்களை எடுத்து வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா்.

அண்ணா சாலைப் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால், இந்தச் சாலையில் சுற்றுலா வாகனங்களும், சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களும் அதிக அளவில் வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, சந்தைக்கு வரும் பொது மக்கள் மீதும் வாகனங்கள் மோதிவிடுகின்றன.

எனவே, வாரச்சந்தை நாள்களில் மூஞ்சிக்கல் பகுதியிலிருந்து அண்ணா சாலைக்கு வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. இதற்கு காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்க... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்

பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா். பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து. பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா். திரு... மேலும் பார்க்க

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவிமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமா... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்

‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த வி... மேலும் பார்க்க