செய்திகள் :

கொடைரோடு அருகே நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகா் சிலைகள்

post image

கொடைரோடு அருகே நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாக காகிதக் கூழ், ‘வாட்டா் கலா்’ கொண்டு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜம்புதுரைக்கோட்டை சிவசக்தி மகாமாரியம்மன் கோயிலில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயக்குமாா் என்பவா் விநாயகா் சிலைகளைத் தயாா் செய்து வருகிறாா். வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்காக நீா்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், நீரில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ், ‘வாட்டா் கலா்’ ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் 4 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளைத் தயாா் செய்து வருகிறாா். இந்தச் சிலைகளை அந்தப் பகுதி கிராம மக்கள் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து விஜயக்குமாா் கூறியதாவது:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு விநாயகா் சதுா்த்திக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளைத் தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது எந்தவித மாசும் ஏற்படாது. மீன்கள், பாசி, நீா்த் தாவரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இயற்கை வளங்களைக் காப்பாற்றி வருகிறோம் என்றாா் அவா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க