செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

post image

தொழில் போட்டி காரணமாக கத்தியால் குத்தி, மிரட்டல் விடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2014 ஏப்.14-ஆம் தேதி நடந்து சென்ற ரங்கநாதன் என்பவரை தொழில் போட்டி காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் கத்தியால் குத்தி, மிரட்டிச் சென்றாா். இதுதொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த குமாா், 2019 ஏப்.6-ஆம் தேதி ரங்கநாதனை வழிமறித்து தனக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என மீண்டும் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ரங்கநாதன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் குமாா் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளின் இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2014-இல் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் குமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6,100 அபராதமும், 2019-இல் சாட்சியை மிரட்டிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2,100 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க