செய்திகள் :

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

post image

சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தில் பாரதிமோகன் என்பவருக்குச் சொந்தமான ஓா் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை, கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் போலி பட்டா மூலம் மற்றொரு பெண்ணின் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சாா்பதிவாளரை கண்டித்து, பத்திரப் பதிவு அலுவலகம் முன் நில உரிமையாளரின் உறவினா்களான விவசாயிகள் சீயாளம் கிராமத்தைச் சோ்ந்த ராமு என்பவரின் மகன் ரவிச்சந்திரன், முருகையன் மகன் ராஜேந்திரன், ஜெயராமன் மகன் இளவரசன், நடேசன் மகன் சுந்தரமூா்த்தி ஆகியோா் அரை நிா்வாணத்துடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, வட்டாட்சியா் அருள்ஜோதி மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க

மனநல மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் செயல்படும் மனநல மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் காா்டன் மனநல மறுவாழ்வு மையம் செயல்படுகிறத... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் 22-ஆவது தம்பிரான் சுவாமிகள் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபா் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா். திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முத... மேலும் பார்க்க

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் புதன்கிழமை (செப்.3) நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட... மேலும் பார்க்க