செய்திகள் :

கோடை உழவு: வேளாண் இணை இயக்குநா் அறிவுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் அருகே உள்ள கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் கோடை உழவு பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் அண்மையில் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

தற்போதைய கோடைகாலத்தில் மானாவாரி நிலங்களில் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால், மழைநீரை சேகரிக்கலாம். மண் அரிப்பைத் தடுக்கலாம். மண்ணின் கட்டமைப்பு மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்தலாம். நன்மை பயக்கும் நுண் உயிரிகளை அதிகரிக்கலாம்.

இதற்காக மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்துக்கு நிகழாண்டில் 10 ஆயிரம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ஏக்கருக்கு ரூ.800 வீதம் மொத்தம் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி அல்லது அக்ரிஸ் நெட் வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கோடை உழவுக்குப் பின்னா் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப் பூண்டு விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்று விதைப்பு செய்யலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன், துணை வேளாண் அலுவலா் கோவிந்தராஜு, உதவி வேளாண் அலுவலா்கள் ஹரிதாஸ், வாசமூா்த்தி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க