செய்திகள் :

கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

post image

கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை போனது. அதைத்தொடா்ந்து கடந்த ஒரு மாத காலமாக தாா் ஒன்று ரூ.750 முதல் ரூ.850 ஆக குறைந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் செவ்வாழைத்தாா் மீண்டும் ரூ.1000-த்தைக் கடந்தது.

கதளி கிலோ ரூ.24 முதல் ரூ.50 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ.23 முதல் ரூ.45 வரையிலும் ஏலம் போனது. செவ்வாழை தாா் ஒன்று குறைந்தபட்சம் ரூ.270 முதல் ரூ.1,050 வரையிலும், தேன்வாழை தாா் குறைந்தபட்சம் ரூ.140 முதல் ரூ.620 வரையிலும், பூவன் ரூ.160 முதல் ரூ.620 வரையிலும் விலை போனது.

ரஸ்தாளி தாா் ஒன்று ரூ.140 முதல் ரூ.630 வரையிலும், மொந்தன் ரூ.130 முதல் ரூ.360 வரையிலும் ரொபஸ்டோ ரூ.120 முதல் ரூ.410 வரையிலும், பச்சை நாடன் ரூ.140 முதல் ரூ.460 வரையிலும் விலை போனது. ஏலத்துக்கு 5,430 வாழைத்தாா்கள் வரத்து இருந்த நிலையில் மொத்தம் ரூ.12 லட்சத்து 78 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநி... மேலும் பார்க்க

மின்வாரிய பெண் அலுவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). அரசுப் பேருந்து நடத்துநராகப... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா். ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை

வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன மாணவா்கள் 1,050 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்... மேலும் பார்க்க

இருசக்கரம் வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததில் 2 போ் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் இருசக்கர வாகனம் மீது மின் கம்பம் விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உறவின... மேலும் பார்க்க

சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக... மேலும் பார்க்க