கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகை திருடுபோன வழக்கு: 7 போ் கைது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருடுபோன வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தலைமை அா்ச்சகராகப் பணியாற்றியவா் குமாா் பட்டா். இவரது மனைவி பிரியா. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மகன் கும்பகோணத்தில் உள்ள பாடசாலையில் வேதம் பயில்கிறாா். இவா்களது வீடு முத்தாரம்மன் கோயில் பின்புறம் கீழமலையான் தெருவில் உள்ளது.
இதற்கிடையே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமாா் பட்டா் ஜூன் 16 ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், மனவேதனையில் இருந்த அவரது குடும்பத்தினா் நெல்லையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஆக. 13 ஆம் தேதி மீண்டும் ஊா் திரும்பினா். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன; உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 107 பவன் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் திருடுபோனது தெரியவந்தது. தகவல் அறிந்துவந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய மணப்பாடு பிரவீன்குமாா் மகன் மரியயோசுவான், குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரம் கணேசன் மகன்கள் பட்டுதுரை (30), சின்னமருது (19), குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்கள் சின்னத்துரை (27), இசக்கிமுத்து (23), தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த சுந்தர்ராஜ், குலசேகரன்பட்டினம் மறக்குடியைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகசுந்தரம் (28) ஆகிய 7 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில்
குமாா் பட்டரின் குடும்பத்தினா் ஊரில் இல்லாத ஆக. 8, 10 ஆம் தேதிகளில் அவரது வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, போலீஸாா் 7 பேரையும் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.